tamilnadu

img

94 ரோஜாக்களை பலி வாங்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து.... உரிய நீதி, இழப்பீடு கிடைக்கவில்லை பெற்றோர்கள் வேதனை

கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் வெந்து மடிந்த குழந்தைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்க பள்ளியின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்து பள்ளி முழுவதும் பரவி 94 குழந்தைகளை பலிகொண்டது. கீற்றுக்கொட்டகை மேற்தளத்துடன் பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவந்த அப்பள்ளியால் இத்தனை உயிர்கள் பலியானது. 18 குழந்தைகள் படுகாயம டைந்தனர். இந்த கொடூர நிகழ்வு தமிழகம்மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் துயரத்தை உருவாக்கியது.இப்பள்ளி குழந்தைகளின் நினை வாக கும்பகோணம் காவிரிக்கரையில் நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 அன்று குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், தங்கள் வீடுகள், குழந்தைகளின் சமாதி, தீ விபத்து ஏற்பட்ட பள்ளி ஆகிய இடங்களின் முன்பு தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு, உடைகளை வைத்து படையலிட்டு வணங்கும் காட்சி காண்போர் நெஞ்சை கலங்கச் செய் கிறது.

இந்த தீ விபத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி கட்டுமானம், பாது காப்பு போன்றவற்றில் பெருமளவு விழிப்புணர்வு உருவாகியிருந்தாலும், இப்போதும் சில பள்ளிகள் உரிய பாதுகாப்பு இன்றி இயங்கத்தான் செய் கின்றன.கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு உரிய நீதி, உரிய இழப்பீடு ஏதும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர் குழந்தைகளின் பெற்றோர் கள். தங்கள் குழந்தைகள் இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர்கள் தற்போதுகல்லூரிக்கு சென்று கொண்டிருப்பார் கள் என கண்ணீருடன் பிஞ்சுகளைஇழந்த பெற்றோர்கள் வேதனைப்படு கின்றனர்.இந்நிலையில் தீயில் கருகிய 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோ.அரவிந்தசாமி, சிஐடியு மாவட்ட பொருளாளர் ம.கண்ணன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

;