tamilnadu

img

குமரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 3 பேர் பலி

மருத்துவமனை முதல்வர் தகவல்

நாகர்கோவில், மார்ச் 28-  கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பு வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த 3 நோயாளிகள் சனிக்கிழ மையன்று உயிரிழந்தனர்.  இதுகுறித்து ஆசாரிபள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி சனிக் கிழமையன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  கண்காணிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளி கள் சனிக்கிழமையன்று உயிரிழந்த னர். அந்த மூன்று நோயாளிகளுக்கும் சளி, ரத்த மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பரி சோதனைக்காக அனுப்பியுள் ளோம். அதன் பரிசோதனை முடிவு கள் இன்னும் வரவில்லை. பொது மக்கள் இதுகுறித்து பயப்பட வேண் டாம். இதுகுறித்து மக்களிடையே தவ றான வதந்திகள் பரப்பப்படுகிறது. 

இறந்த 3 பேரில் மரிய ஜாண் என்பவர் ஏற்கனவே 5 வருடங்க ளுக்கு மேலாக சர்க்கரை நோயா லும், அதிக ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து க்ரானிக் கிட்னி நோய் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெள்ளி யன்று 11.50 மணிக்கு உயிரிழந்தார். அவரது சளி, ரத்த மாதிரிகளை பரி சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவரது மரணத்துக்கு காரணம் சிறு நீரக நோய்தான் என மருத்துவர் குழு கண்டறிந்துள்ளது. ராஜேஷ் என்ற இளைஞருக்கு இரண்டு நாளைக்கு முன்னால் காய்ச்சல் வந்துள்ளது. அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட் டுள்ளது. என்ன நோய்த்தொற்று என தெரியவில்லை. அவரது ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு மூச்சுத்திண றலால் சனிக்கிழமையன்று காலை 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவர் வெள்ளிக்கிழமை மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு வயது ஆண் குழந்தை பிறந்ததில் இருந்து ஆஸ்டியோ பெட்ரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந் தது. இந்த குழந்தைக்கு இரண்டு வரு டமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சனிக்கிழமை காலை 6 மணியளவில் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு வந்தனர். 10.30 மணியளவில் அந்த குழந்தை இறந்து விட்டது. 

மூன்று பேரின் ரத்த, சளி மாதிரி களும் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன.இறந்துபோன 3 பேரின் இரத்த பரிசோதனை முடிவுகளும் இன்று இரவு (சனிக்கிழமை) தெரிய வரும். அதன் பின்னரே இறந்தவர் களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தால் அதற்கான முறைப்படி மட்டுமே சடலங்கள் ஒப்படைக்கப்படும். இது வரை பரிசோதித்ததில் மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவரும் பாதிக் கப்படவில்லை. 

தற்போது குமரி மாவட்டத்தில் எந்த தீவிர நோயாளியாக இருந்தா லும் உடனே மக்கள் பயப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துவதால், என்ன நோய் என முன்கூட்டியே அறிய வாய்ப்பு இல்லாததால் கொரோனா விழிப்புணர்வுடன், அந்த நோயாளிகளை நாங்கள் தனி யாக அமைக்கப்பட்ட 100 படுக்கை வசதியுடன் கூடிய கண்காணிப்பு அறைகளில் அனுமதித்து வருகி றோம். 

இரத்த பரிசோதனை செய்ய நெல் லைக்கு அனுப்பப்படுவதால் முடிவு கள் அறிந்து கொள்ள காலதாமதம் ஆகிறது. எனவே இங்கேயே இரத்த பரிசோதனை மையம் அமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் கொரோனா சந்தேகத்தின் பேரில் அதற்கான தனிப்பிரிவில் ஒருவரும் மற்றொரு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி அறைகள் 125, 500 படுக்கை வசதி களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிப்பதற்காக 6 குழுக்களாக மருத்துவர்கள் பிரிக்கப்பட்டு பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். இங்கு தற்போது 40 வென்டிலேட்டர் உள்ள நிலை யில், மேலும் 30 வென்டிலேட்டர் அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் அறிவிப்பு

இச்சம்பவம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: இரண்டு வயது ஆண் குழந்தை பிற எலும்பு நோயாலும் 66 வயது ஆண் நீண்ட நாள்களாக இருந்த சிறு நீரக நோய் காரணமாகவும் 24 வயது ஆண் நிமோனியா தொற்றி னால் பாதிக்கப்பட்டு அவரது ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்த தால் உயிரிழந்துள்ளனர் என்று தெரி வித்துள்ளார். மேற்குறிப்பிட்டுள்ள 3 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரி கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.