பெங்களூரு, ஜூலை 22- செவ்வாயன்று சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தமது அரசு தோல்வியுறும் என்ற நிலையில் திங்களன்று இரவு ஆளுநரை சந்தித்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார் என தக வல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகத்தில் காங்கி ரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு 14 மாதமாக ஆட்சியில் இருக்கிறது. இந் நிலையில் எதிர்க்கட்சியான பாஜக இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு தீவிரமான குதிரை பேரத்தில் ஈடுபட்டுள் ளது. இந்நிலையில் காங்கி ரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜி னாமா கடிதம் அளித்துவிட்டு மும்பையில் தஞ்சமடைந் ததை தொடர்ந்து கர்நாட கத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பின்னணி யில் கடந்த ஜூலை 19 அன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் கெடு விதித்தார். அதை நிரா கரித்து, ஜூலை 22க்கு ஒத்தி வைத்த சபாநாயகர், அன் றைய தினம் வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறினார். ஆனால் திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு உள்ளிட்ட பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த நிலை யில், வாக்கெடுப்பு செவ்வா யன்று காலை நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழப்பமான, பரபரப்பான அரசியல் சூழ லில் முதலமைச்சர் குமார சாமி திடீரென ஆளுநருக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார் என செய்திகள் வெளியாகின.