tamilnadu

img

தமிழக அரசுக்கு ‘கிருஷி கர்மான்’ விருது

சென்னை, செப்.20- எண்ணெய்வித்து பயிர்களில் தமிழ் நாட்டின் சாதனைக்காக, 2017-18-ம் ஆண் டின் “கிருஷி கர்மான்’’ விருதுக்கு தமிழ் நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு  செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விளை பொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் திறனை அதிகரிக்க வும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும் புதிய சாகுபடி தொழில்  நுட்பங்களால் தமிழ்நாடு 2011-12, 2013-14,  2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்க ளில் 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிக மாக உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை அடைந்துள்ளது. தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சி களால் தமிழகத்தில், வேளாண் உற்பத்தி  அதிகரித்து உயரிய சாதனை அடைந்த தற்காக நான்கு முறை மத்திய அரசு “கிருஷி  கர்மான்’’ விருதினை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த விருதினையும் சேர்த்து, 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம்  ஆண்டு வரை அரசு, வேளாண்மைத் துறை யில் ஐந்து முறை “கிருஷிகர்மான்” விருதி னைப் பெற்று சாதனை படைத்துள்ளது.