மதுரை, ஏப்.18- கொரோன வீரியம் குறைந்து வருவதாக பிரதமர் மோடி தொடங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை வார்த்தைகளால் விளையாட்டு காட்டி வருகின்றனர். உண்மை யில் தமிழகம் தொடங்கி பல்வேறு மாநிலங்க ளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயி ரத்தை தாண்டிவிட்டது. குறிப்பாக மகா ராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை மூவாயிரத்தை தாண்டிவிட்டது.
ஆயிரத்தை தாண்டிய மாநிலங்கள்
சனிக்கிழமை காலை எட்டு மணி நிலவரப் படி மகாராஷ்டிரத்தில் 3,303 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 201 பேர் உயிரிழந்துள்னர். தமிழ்நாட்டில் 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 15 பேர் பலியாகியுள்ளனர். மத்திய பிர தேசத்தில் 1,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 1,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், தெலுங்கானா மாநி லங்களில் 700 முதல் 850 பேர் வரை பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த மாநிலங்களும் ஆயி ரத்தை நெருங்கி வருகின்றன. கொரோனா பரவியுள்ள 32 மாநிலங்களில் 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,992 பேர் குணமடைந் துள்ளனர். 480 பேர் பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டா யிரமாக உள்ளது.
கொரோனா பணியில் ஓய்வு மருத்துவர்கள்
இந்த நிலையில், சனிக்கிழமை நடை பெற்ற அமைச்சர்கள் குழு கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் (நோய் தீவிரமுள்ள பகுதிகள்) அதை தடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள், மருத்துக் கல்லூரியில் இறுதியாண்டு படிக் கும் மாணவர்களையும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து விவாதிக் கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.