tamilnadu

img

மதுபான கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுபான கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.  கொரோனா பரவுவதற்கு கிராமசபை கூட்டங்கள் காரணமாகிவிடும். அங்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்படாத நிலை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் கே.என்.நேரு வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், தனிமனித இடைவெளி காரணமாக கிராமசபை கூட்டம் ரத்து என்றால் மதுபானக்கடைகளில்  தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு இது தொடர்பாக பதிலளிக்க, ஜனவரி 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.