சென்னை, ஏப்.7- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்த மாக தமிழக அரசின் உள்துறைச் செயலாள ருக்கு தமிழ்நாடு ஏஐடியுசி தலைவரும் மக்க ளவை உறுப்பினருமான கே.சுப்பராயன் கடி தம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதன் வருமாறு; சென்னையில் 40 சமூகநல கூடங்களில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வைக்கப் பட்டி ருக்கிறார்கள். அவர்களை சொந்த ஊருக்கு செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நிர்ப் பந்தம் செய்வதாக செய்திகள் வருகின்றன.
சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் வலியுறுத்த வில்லை என்றும் விருப்பப்பட்டால் போகலாம் என்றுதான் கூறி யிருப்பதாக சொல்லியிருக்கிறார். தமிழ கத்தின் பல்வேறு நகரங்களில் தமது உழைப் பால் தமிழ்நாட்டு தொழிலுக்கும் மாநில மேம் பாட்டுக்கும் தனது உழைப்பை செலுத்திய அவர்களை, இக்கட்டான இந்த நேரத்தில் இன்னும் கவுரவத்துடன் அரசு கையாள வேண்டும். அன்றாடம் உழைத்து அதன்மூலம் கிடைத்த ஊதியத்தில் குடும்பம் நடத்தி வந்த இவர்கள், கையிலிருந்த பணம் கரையக் கரைய மாநகராட்சி யின் நிவாரண மையங் களை நாடி வருவது இயல்பானதாகும். எனவே தமிழகத்துக்குள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு, இலவச மாக போக்குவரத்து வசதியை செய்து தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு அரசாங்கம் இதுவரை வழங்கவேண்டிய ஊதி யத்தை உடனடியாக அரசு பெற்றுத்தர வேண்டும்.
வடமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தமது சொந்த ஊருக்குத் சொல்ல விரும்பினால் அதற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்யவேண்டும். முன்னெப் போதும் கண்டிராத ஒரு கொடூரமான சூழ லில், மத்திய அரசிடம் தயங்காமல் பேசி இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்க ளுக்காகவே ரயில்களை இயக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.