tamilnadu

img

போலி இ-பாஸ் பயன்படுத்தி கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை, ஜூன் 23- போலி இ-பாஸ் பயன் படுத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து கோவைக்கு வருபவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட எல்லை களில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை   தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார். 

கோவைக்கு போலி இ-பாஸ் பயன் படுத்தி வருவோர்களின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. இந்நிலையில், திங்களன்று கரு மத்தம்பட்டி சோதனைச் சாவடியில் அதிகாரி கள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத் தில் இருந்து கோவை வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் கள் பயன்படுத்தி வந்த இ-பாஸ்  போலியானது என்பது கண்டறியப்பட்டது. சுக்காராம்  என்ற  பெயரில் ஏற்கனவே பெறப்பட்டிருந்த இ- பாஸை மாற்றி, அதை வாகனத்தில் ஒட்டிய படி பயணம் செய்து இருப்பதும்  தெரிய வந்தது. மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குஜராத், மத்திய பிரதேசம், மகா ராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங் களை கடந்து தமிழகத்திற்குள் இந்த போலி  இ-பாஸ் மூலம் பயணித்து வந்து  இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக பேருந்தில் பயணித்த 30 பேருக்கும் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பேருந்தை பறிமுதல் செய்த கருமத் தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலியாக இ-பாஸ் தயாரிக்க கொடுக்கப்பட் டுள்ள ஆதார் எண் உள்ளிட்ட   தகவல்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.