tamilnadu

img

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா பாதிப்பு...

சென்னை 
கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் படுவேகமாக பரவி வருகிறது. சென்னை மட்டுமல்லாது அனைத்து நகர பகுதிகளிலும் தனது பரவல் வேகத்தை அதிகரித்துள்ள கொரோனா வைரஸ், கிராம பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் வேகமாக பரவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. 

இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தமிழகத்தின் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை (5,849) தாண்டியுள்ளது. இந்த செய்தி தமிழக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,86,482 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரதத்தில் 74 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை விடுபட்ட 444 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது. 4,910 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமண்டத்தவர்களின்  மொத்த எணிக்கை 1,31,583 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 51,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பரிசோதனை 
கொரோனா அறிகுறியுடன் வந்த 60,112 மாதிரிகளில் 58,475 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை 113 ஆக உயர்ந்துள்ளது. 

;