கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாருக்கு ஆக. 10-ஆம் தேதி தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவர் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார். இவருக்கு விஜய் வசந்தகுமார் என்ற மகன் உள்ளார். வசந்த் தொலைக்காட்சி, வசந்த அன் கோ நிறுவனங்களை நடத்தி வந்தார். வசந்தகுமார் எம்.பி. மரணச் செய்தி கன்னியாகுமரி மாவட்ட மக்களையும், தமிழக மக்களையும் காங்கிரஸ் பேரியக்கத்தையும் உலுக்கியுள்ளது. அவரது மறைவுச் செய்தியறிந்து நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.