வேலூர்
வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் (தனி) தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் காத்தவராயன் (59). திமுக-வைச் சேர்ந்தவரான இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
காத்தவராயனுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். நிலைமை மோசமானதால் அறுவை சிகிச்சைக்காகக் கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையுடன் கடுமையாகப் போராடியும் பலனில்லை.
இந்நிலையில், வெள்ளியன்று காலை 9.30 மணிக்குக் காத்தவராயன் காலமானார். காத்தவராயனுக்குத் திருமணம் ஆகவில்லை பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 9 மாதங்களே எம்எல்ஏ-வாக இருந்த காத்தவராயன் திடீரென மரணமடைந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. இன்று மரணம் அடைந்து இருப்பது திமுக-வினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.