tamilnadu

img

கையில் லத்தி எடுக்க காவலர்களுக்கு தடை!

சென்னை, மார்ச் 27- அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டி ருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ்  வினியோகம் செய்வோர் மீது காவல்துறை யினர் தடியடி நடத்தியது குறித்து விரிவான செய்திகள் வெளியானது. இதை சுட்டிக்காட்டி, ‘ஆட்சிக்கு கெட்ட  பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட  வேண்டாம்’ என காவல்துறை அதிகாரி களுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை காவல் ஆணையர் ராஜேந்திரன் ‘வாட்ஸ் ஆப்’ ஆடியோ வழி யாக காவலர்களுக்கு வழங்கியுள்ள அறி வுரைகள் வருமாறு:- ஊரடங்கு பணியில் உள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்  களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். பொது  மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களி டம் பக்குவமாக பேசி, புரிய வைத்து அனுப்புங்கள்.

கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள்.  வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியா வசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு  பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என,  கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்கு வரத்து காவலர்கள் பார்த்துக்  கொள்வர். பொது அறிவை பயன்படுத்தி னால், இது போன்ற பிரச்னைகள் வராது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

;