சென்னை, பிப். 6- குரூப்- 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தமிழகத்தில் 2019 செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தி ருப்பதாக புகார் எழுந்தது. இதை யடுத்து, அரசு பணியாளர் தேர்வா ணையம் நிர்வாகம் நடத்திய விசா ரணையில் குரூப் 4 போட்டித் தேர்வில் முறைகேடுகள் நடந்தி ருப்பது உறுதியானது. இந்த முறைகேட்டில் ஈடு பட்ட 99 தேர்வர்களை அரசுப் பணி யாளர் தேர்வாணையம் கண்டு பிடித்து, அவர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடைவிதிக்கப் பட்டது. இந்த முறைகேடு தொடர் பான வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் நடத்தி வரும் விசா ரணையில் அரசு அதிகாரிகள், இடைத் தரகர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குரூப்- 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் வியாழ னன்று (பிப்.6) சரணடைந்தார். இதையடுத்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
முன்ஜாமீன் கோரிய பெண் ஊழியர்
இந்நிலையில் குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் துறையினர், முறைகேட்டில் ஈடு பட்டு அரசுப் பணியைப் பெற்ற பலரை கைது செய்து வரும் நிலை யில், தலைமைச் செயலக பெண் ஊழியர் முன் ஜாமீன் கோரி யுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்த தாகக் கூறி 2017ஆம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களு டன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளர் பணியில் உள்ளார்.
பிரசவ விடுப்பில் உள்ளார்
தன்னுடன் தேர்வெழுதியவர் கள் கைதாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் முன் ஜாமீன் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது.முன்ஜாமீன் கோரியிருக்கும் கவிதாவுக்கு ஜன வரி மாதம் தான் ஆண் குழந்தை பிறந்து, அவர் தற்போது பிரசவ கால விடுப்பில் இருக்கிறார் என் பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழி யர் ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ், முறைகேடு செய்து தேர்வு எழுதிய ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடந்தாங்கல் பகுதி யைச் சேர்ந்த ம. கார்த்தி, ஆவடி அருகே உள்ள ஏகாம்பரசத்தி ரத்தைச் சேர்ந்த ம. வினோத் குமார், கடலூர் மாவட்டம், பண் ருட்டி பகுதியைச் சேர்ந்த க. சீனுவாசன் உள்ளிட்டோரை சிபி சிஐடி போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
மேலும் நடைபெற்ற தீவிர விசாரணையில் சென்னை மாந கர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றும் சிவ கங்கை மாவட்டம் பெரியகண்ண னூரைச் சேர்ந்த காட்டுராஜா மகன் சித்தாண்டி என்பவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் உதவி யுடன் முறைகேட்டில் ஈடுபட்டு தனது மனைவி பிரியா, அவரது சகோதரர்கள் வேல்முருகன், கார்த்தி ஆகியோர் மட்டுமின்றி வேல்முருகன் மனைவிக்கும் வேலை வாங்கி கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதுதவிர, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஏராளமா னோருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதும் தெரிய வந்தது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்குடி சார்- பதிவாளர் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனை சிபிசிஐடி போலீ ஸார் கைது செய்தனர்.
கைதான 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணையில், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. அதனடிப்படையில், சிபிசிஐடி அதிகாரிகள் குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 பேர் மீது கடந்த 31-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, தே.பூபதி உட்பட பலரை கைது செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் கைதான காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.