tamilnadu

img

கஜா புயல் பாதிப்பு: நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

சென்னை,ஜூலை 23- கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டு, நாகை மாவட்டம் தலைஞாயிறில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 140 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டு வேதாரண்யம் நீதிமன்றத் தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதை எதிர்த்த முறையீட்டில், விசாரணை க்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கின் இறுதி விசாரணை செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிவார ணம் வழங்கப்படாததை கண்டித்தே மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் போராட்டத்தின் போது காவல் துறை வாகனம் தாக்கி சேதப்படுத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால் காவல்துறை வாகனத்தைத் தாக்கியதாக 60 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார்.