புதுச்சேரி, ஆக. 11- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்துள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை செயலாளர், தேசிய நிர்வாகக் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளனர். அதனடிப்படை யில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுஇடங்களில் விநாயகர் சிலை கள் வைக்கவும், ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணை யர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக் கப்படும். தனியார் கோவில்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைப்பது, சிலைகளை வைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து இருப்பதால் கோவில் களில் பிரசாதம் வழங்க கூடாது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அனு மதியில்லை. இவற்றுக்கு பொதுப்பணித்துறை, நகராட்சிகள், காவல்துறை, மாஜிஸ்திரேட்டுகள் எந்த ஒரு அனுமதியும் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.