tamilnadu

img

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை

கோவை, பிப். 29- கோவையில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்னை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை அடுத்த கீரணத்தம் கல் லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவர் கோவை அரசு கலைக்கல்லூரி யில் இறுதியாண்டு பயின்று வந்தார்.  இதேபோல், கணபதி பகுதியை சேர்ந்த வர் தினேஷ். இருவரும் காதலித்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினேஷின் நடவ டிக்கையில் அதிருப்தியடைந்த நந்தினி, அவருடன் பேச மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்தி்ரத்திலிருந்த தினேஷ் வெள்ளியன்று நந்தினியின் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கி யுள்ளார். இதன்பின், நந்தினியின்  கழுத்தை நெரித்ததுடன், அவரது வாயில் சாணிப்பவுடரை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இந்த நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய நந்தினியின் பெற்றோர், மகள் மயக்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து நந்தினியை மீட்ட அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தினி சனி யன்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இத னிடையே தப்பியோடிய தினேசும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவில்பாளையம் காவல்  துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.