tamilnadu

img

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை காலமானார்

சென்னை, மே 6- முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்  மலை உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 67. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, சென்னையில் அவரது இல்லத் தில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சொந்த  ஊரான செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே  உள்ள இரும்பேடு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர் எழில்மலை. 1970 ஆம்  ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்த எழில்மலை, 1971ஆம்  ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாக  பணி யாற்றியவர்.

ராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றியதற்காக குடியரசுத் தலை வரிடம் கே. சைனிக் சேவா பதக்கம் பெற்றார்.  ராணுவத்தில் இருந்து ஓய்வு  பெற்ற தலித் எழில்மலை, 1990 ஆம் ஆண்டு பாமக-வில் இணைந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரானார். 1998 ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில்  சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக  தேர்வு செய்யப்பட்ட அவர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சர வையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2001ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சி  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக  அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்  தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.