tamilnadu

img

உளுந்தூர்பேட்டை மீன் அங்காடியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

உளுந்தூர்பேட்டை. ஜூலை 4- உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள  மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாது காப்புதுறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குந்தர் வீதி யில் உள்ள மீன் மார்க்கெட்டில் காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்  சேரி ஆகிய இடங்களில் இருந்து வாங்கி  வரும் வவ்வால், சங்கரா, இறால் உட்பட பல்வேறு வகையான மீன்கள் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மாநிலம் முழுதும் முழு  பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளதால், ஏராளமான பொது மக்கள் சனிக்கிழமையன்று மீன் மற்றும் இறைச்சிகளை வாங்க குவிந்தனர். இந்நிலையில் மீன் மார்க்கெட்டில் கெட்டுப் போன பழைய மீன்கள் விற்கப்  படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் சின்னப்பன், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கதிரவன் ஆகி யோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை செய்தனர்.

சோதனையில் கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்  யப்படுவது தெரிய வந்தது. இதை யடுத்து 70 கிலோ மீன், 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.  மேலும் மீன் வாங்க வந்த  பொதுமக்களில் முகக் கவசம் அணி யாமல் வந்தவர்களுக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன் மற்றும்  இறைச்சிகளை பேரூராட்சிக்கு சொந்த மான குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.