சென்னை,மார்ச் 31- தமிழக அரசின் ‘கோவிட்-19’ தடுப்பு நடவ டிக்கைகளுக்கு ஒருநாள் ஊதியத்தை மின்வாரியம் மற்றும் போக்குவரத்துத் துறை யில் பணியாற்றும் ஊழியர்கள் வழங்கு கின்றனர். இதுதொடர்பாக மின்வாரிய கூட்டு நடவ டிக்கைக்குழு சார்பில், மின்வாரிய தலைவ ருக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘கொரோனா நிவாரணத்துக்கு தமிழக மின்வாரிய ஊழி யர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் மன முவந்து தங்களது ஒருநாள் ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள தொழிற்சங்கத்தினர் சம்மதித்துள்ள னர். இதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்துத்துறைக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களுக்கு உதவும் அடிப்படையில் போக்கு வரத்துக் கழகங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்குவது என கூட்டமைப்பு சங்கங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன. எனவே தொழி லாளர்களிடம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நிர்வாகங்கள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரி விக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலை வர் எஸ்.ரத்தினமலா, பொதுச்செயலாளர் டி.டெய்சி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் கொரோனா ஒழிப்புக்கு தமிழக அரசுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளனர். கோரோனா நிவாரணநிதிக்கு சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கு வார்கள் என்றும் அவர்கள் ஒரு அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.