நாகர்கோவில், ஜூலை 17- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்க ளுக்கான தேர்வை தனியார் நிறுவ னம் அமேசான் நடத்த மத்திய அர சும், பல்கலைக்கழக மானியக்குழு வும் அனுமதி அளித்துள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளியன்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பதில் சிங் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரிஸ்கில், மாவட்ட நிர்வாகி சச்சின், விக்னேஷ், மெர்பின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்து வதை கண்டித்தும் முழக்க மிட்டனர்.