tamilnadu

img

சீரான குடிநீர் விநியோகம் செய் – சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்

கோவை, ஜூன் 28– சீரான குடிநீர் விநியோகத்தை தங்கு தடையின்றி மாநகரம் முழுவதும் விநியோகிக்க வலியுறுத்தி கோவையில் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சீரற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக கோவை மாநகர பகுதியில் குடிநீர் விநியோ கத்தை பிரன்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை இருப்பது போன்று செயற்கையாக தோற்றத்தை ஏற்படுத்தி சூயஸ் நிறுவனம் வந்தால் குடிநீர் விநியோகம் சீராக 24 மணிநேரமும் நடைபெறும் என்கிற தோற்றத்தை திட்டமிட்டே கோவை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த பிரச்சாரத்தையும் சூயஸ் நிறுவன ஊழியர்களுடன், மாநகராட்சி ஊழியர்களும் குடியிருப்பு பகுதி மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகரம் முழுவதும் குடிநீரை சீராக விநியோகம் செய்ய வேண்டும். குடிநீரை சூறையாடும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  பில்லூர் 3 ஆவது குடிநீர்  திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோவை மாநகரத்தில் உள்ள குண்டும், குழியுமான அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தின் கோரிக்கை கள் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் உரையாற்றினர்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கருப்பையா, என்.ஜெயபாலன்,  வி.பெருமாள், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி, கே.அஜய்குமார், கே. எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். முன்னதாக போராட்டத்திற்கு காவல்துறை யினர் அனுமதி மறுத்த நிலையில் தடைமீறி தர்ணா போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.