tamilnadu

சேவூரில் தற்காலிக சாலையோர கடைகள் அகற்றம்

அவிநாசி, ஜூன் 22-  அவிநாசி அருகே சேவூரில் கொரோனா வைரஸ் நோயை  கட்டுப்படுத்தும் வகையில் கோபி சாலையில் இரு புறமும் வைத்திருந்த சாலையோர தற்காலிக கடைகளை திங்க ளன்று காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாரச்சந்தை  கடந்த மூன்று மாதங்களாக செயல்படவில்லை. இதனால் சந்தை வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கோபி  சாலையில் இருபுறமும் காய்கறி கடைகள் அமைத்து கடந்த ஒரு மாதமாக விற்பனை செய்து வந்தனர். ஒ்ரு சில கடை களே இருந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக வெளியூர் வியாபாரிகளும் இப்பகுதியில் கடைகளை அமைத்து வியா பாரம் செய்ய தொடங்கினர். மேலும், அந்த இடத்தில் 70க்கும்  மேற்பட்ட கடைகள்  உருவானது. இதனால் வாகன போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், தனிமனித இடை வெளியை கடைபிடிக்காமலும் இருபுறமும் வியாபாரம் செய்து வந்தனர். இதையறிந்த சேவூர் காவல்  துறையினர் கொரோனா வைரசின் பாதிப்பை உணர்ந்து  தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத் தினர்.