tamilnadu

img

புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் உணவு மணமூட்டிகளுக்கு உண்டு

சித்த மருத்துவர் கு. சிவராமன் பேச்சு

புதுக்கோட்டை, பிப்.15- புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் நாம் உணவில் பயன்படுத்தும் மணமூட்டிகளுக்கு உண்டு என்றார் சித்த மருத்துவர் கு. சிவராமன். புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வின் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:  பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு பாலியல் நோய்  களும், குழந்தைகளுக்கு கவனச்சித றல் நோயும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  உளவியல் நோயும் பலருக்கும் அதிகரித்து வரு கிறது. கரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டி ருக்கிறோம். ஆனால், பாம்பு சாப்பிட்ட தால் வந்த வினை என்று எவ்வித அறி வியல் உண்மையும் இன்றி சீனர்களைக் கிண்டல் செய்கிறோம்.

இதுவரை இல்லாத யாரும் எதிர் பாராத நுண்ணுயிரிகளின் தாக்கமும், சாதாரணமாக நோய்களும் இனி பேரா பத்தைத் தரும் என்ற அச்சத்தை மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர்.  மலேரியா, டெங்கு ஆகியவற்றின் வைரஸ்களின் வடிவங்கள் ஆண்டுதோறும்  மாறிக் கொண்டே வருகின்றன.

தவறுகள் எங்கே நடக்கின்றன?

உணவுப் பழக்கமே முதன்மை யான காரணமாக உள்ளது. சோளம், ஓட்ஸ் போன்ற தானியங்களில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அவற்றை 100 டிகிரி வெப்பத்தில் வேகவைத்து, இடித்து, நீர்ச்சத்தை உறிஞ்சி, அடித்துத் தட்டையாக்கி, கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனங்களை கொட்டித்தான் நமக்கு உணவாகத் தரப்படுகின்றன. இதனால்,  இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி  நமக்குக் குறை கிறது. கல்லையும் தின்று செரித்த நமக்கு இப்போது செரிமானக் கோளா றுகள் அதிகமாக ஏற்படுகின்றன. காய்ச்சலுக்கு இட்லியும், கஞ்சி யும்தான் உகந்த உணவுகள். ஆனால், ஆங்கிலேயர்களின் தாக்கத்தால் நமக்கு ரொட்டி சாப்பிடும் பழக்கம் ஒட்டிக் கொண்டது. 80 சதவிகிதம் காய் கறிகள், கனிகளையும், 20 சதவிகிதம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானி யங்களை உண்ண வேண்டும். வெள்ளைவெளேரென இருக்கும் அரிசியை உண்பதைத் தவிர்க்க வேண் டும். பாலீஷ் செய்யப்படாத பழுப்பு நிறம் கொண்ட அரிசி, சிவப்பரிசி, கருப்பரிசிகளையும் இடையிடையே சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றி லுள்ள நிறங்கள் பல்வேறு தனித்த சத்துக்களை நமக்குத் தருவதோடு, உணவின் சர்க்கரைத் தன்மையையும் குறைக்கிறது. ருசிக்கான உண வாக மட்டுமல்லாமல், வயிற்றுக்குள் இருக்கும் ஏராளமான பாக்டீரியாக் களையும் வாழ வைக்கும் உணவு களாக இருக்க வேண்டும்.

வயிற்றுக்குள் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் எண் ணிக்கை வெகுவாகக் குறைந்தால், நல்ல ஆரோக்கியமான உடல் நலனைக் கொண்டவரின் மலத்தை எடுத்து வயிற்றுக்குள் வைக்கும் ஆய்வுகள் நடந்துள்ளன. அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வில் மலம் கழித்தவரின் மரபு ரீதியான செயல்பாடுகள் அவை வைக் கப்பட்ட நபரின் செயல்பாடுகளை மாற்றுகின்றன என்றும் தெரிய வந்துள்ளது. நம்முடைய மரபு உணவு கள் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் எந்தத் தீமையும் செய்யாத உணவு களாக இருந்தன. இவற்றைத் தவிர்த்து விட்டு குப்பை உணவுகளை வயிற்றுக் குள் கொட்டிக் கொண்டிருக்கிறோம். புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் மணமூட்டிகளுக்கு உண்டு. அன்றாடம் நம்முடைய உணவில் உள்ள இஞ்சி, பூண்டு, சீரகம் போன் றவை வெறும் மணமூட்டிகள் மட்டு மல்ல. டீ குடிக்கும் பழக்கமுள்ளோர் கரி சலாங்கண்ணி பொடி, நெல்லிப்பொடி உள்ளிட்டவற்றை அரைத்து வைத்துக் கொண்டு சூடான நீரில் கரைத்துக் குடிக்கலாம். மரணத்தைத் தவிர அனைத்து நோய்களையும் குணப்படுத் தும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என்பது அரபு மரபாகும். நெல்லிக்காய், கடுக்காயில்  வித விதமான சுவைகள் உள்ளன. ஆனால் நம் குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெரி தெரிகிறது. நெல்லிக்காய் தெரியவில்லை. நெல்லிக்காயை காரமிட்டு, இனிப்பிட்டு, வேகவைத்துச் சாப்பிடுகிறோம். அது தவறு. நெல்லிக் காயை, அப்படியே அதன் சுவையில் சாப்பிட வேண்டும்.

இதையடுத்து மிக முக்கியம் உடற் பயிற்சி. நாளொன்றுக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இரண்டாவது இதயம் கெண்டைக்கால் நடக்கும்போது நன்றாக இயங்கும். நடைப்பயிற்சி சிறுநீரகத்தையும், இதயத்தையும் பாதுகாக்கும். கடைசி யாக மிக முக்கியமானது மனப்பயிற்சி. கல்வி என்ற பெயரில் பெரும் நெருக்கடி களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கி றோம். செல்லிடப்பேசி, இணையம் என்ற பெயரில் பெரும் பரபரப்புக்குள் சிக்கிக் கொண்டுவிட்டோம். எம்பி பிஎஸ் முடித்து உயர்கல்விக்குச் சென்ற 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். யோசித்துப் பார்க்க முடிய வில்லை.

காத்திருக்கத் தோனவில்லை. உடனக்குடன் பதில் எதிர்பார்க்கிறோம். பதட்டமடைகிறோம். இவையெல்லாம் நம்முடைய உடலைக் கெடுக்கும். புற்றுநோய்க்கும், மாரடைப்புக்கும் உதவும். எனவே, மனதை இலகுவாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும் என்றார் சிவராமன்.  நிகழ்ச்சிக்கு ஸ்ரீ காமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பாடநூல் கழகத் துணை இயக்குநர் சங்கரசரவணன்,  நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிர மணியன், அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் உள் ளிட்டோரும் பேசினர். நிகழ்வில் எழுத் தாளர் நா.முத்துநிலவன் தொகுத்து வழங்கினார்.