புதுக்கோட்டை, ஆக.12- அனைத்து மாணவர்களுக்கும் இணைய சேவையை உறுதிப்படுத்தும் வரை இணைய வழிக் கல்வியை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரி க்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தந்தோஷ், நித்தீஷ், கோபி, வைஷ்ணவி ஆகி யோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை. நாராயணன் பேசினார்.