சென்னை,மார்ச் 4- கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி யில் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரைக்கும் அதிமுக உறுப்பினராக இருந்த வர் எம்.பி. ராமச்சந்திரன். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரான இவர், அதன் கீழ் இயங்கும் சக்தி மாரி யம்மன் பொறியியல் கல்லூரியை விரி வாக்கம் செய்வதற்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 20 கோடி ரூபாய் கடன்பெற்றுள்ளார். இதற்காக வங்கி மேலாளர் தியாக ராஜன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று வர 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை லஞ்ச மாக கொடுத்துள்ளார். இது குறித்து 2015 ஆம் ஆண்டில் சிபிஐ பதிவு செய்தது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் முன்னாள் எம்பி ராமச்சந்திரன் அவரது மகன் மற்றும் வங்கி மேலாளர் குற்றவாளிகள் எனவும் 7 ஆண்டுகள் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.