tamilnadu

img

வனத்துறை தாக்குதலில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு சிபிஎம் ஆறுதல்

திருநெல்வேலி, ஜூலை 29- கடையம் ஒன்றியம், மந்தியூர் பஞ்சா யத்து, வாகைக்குளம் தெற்கு தெரு வைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து என்பவரை கடந்த ஜூலை  22 இரவு 11 மணிக்கு, கடையம் வனச்சர கர் நெல்லை நாயகம், விசாரணைக்கு, சிவசைலம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று, விசாரணையின் போது, வனத்துறையினரின் சித்ரவதை யால் அணைக்கரை முத்து உயிரிழந் தார். இந்நிலையில் உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்து குடும்பத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் செவ்வாய் மாலை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், வனச்சரகர் மற்றும் வனத்துறையினர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதி கிடைக்கும் வரை உங்களுடன் துணை நிற்கும் என்று கூறினார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சி கடை யம் ஒன்றியச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப் பினர் ஆர்.முத்துராஜன், ஏ.அருளா னந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், கட்சி உறுப்பினர்கள் துரை, பால்ராஜ், சுப்பையா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.