tamilnadu

img

மருத்துவர்கள் துயரம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சிறையிலடைப்புக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை, ஏப்.24- மருத்துவர்கள் துயரம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரை கைது செய்து சிறையிலடைத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கோவையிலிருந்து செயல்படும் சிம் பிள்சிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் உரிமை யாளர் சாம்ராஜா பாண்டியனை காவல் துறை கைது செய்து சிறையிலடைத்துள் ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த ஊடகத்தில் ‘இலங்கை தமிழர்களுக்கு உணவு கிடைக்கவில்லை’ என செய்தி வெளி யிட்டதற்காக அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதிமுகவினர் கடுமை யாக மிரட்டியுள்ளனர். 

இந்நிலையில் கோவை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் உணவும், குடிநீரும் இல்லாமல் அவதிப்படுவதைப் பற்றியும், ரேசன் பொருட்கள் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்பதை யும் செய்தியாக வெளியிட்டதற்காக அந்த ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற் றும் ஒளிப்பதிவாளர் பாலாஜியை விசா ரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பல மணி நேரம் தங்களின் கட்டுப்பாட்டில் காவல்துறை வைத்துக் கொண்டதோடு, யாரையும் சந்திக்கவும் அனுமதிக்க வில்லை. இறுதியாக, அவர்கள் இருவரை யும் பல மணி நேரம் கழித்து விடுவித்து விட்டு, உரிமையாளர் சாம்ராஜ் பாண்டி யனை சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த அடாவடித்தனத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

தன்னலமற்று சேவை செய்யும் மருத்து வர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் போது அதற்காக போலியாகக் கண்ணீர் வடிப்பதும், அதே மருத்துவர்கள் பிரச்சனை களை எதிர்கொள்ளும்போது அதை அர சின் கவனத்திற்கும் அதிகாரிகளின் கவ னத்திற்கும் கொண்டு வந்தால் அவர்களைப் பிடித்து சிறையிலடைப்பதும் தமிழக அர சின் நேர்மையற்ற அணுகுமுறையையே இது காட்டுகிறது.

கோவை மருத்துவக் கல்லூரி முதல் வர் இடமாற்றம் செய்யப்பட்டு, முதுநிலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் மீது விசா ரணை நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பிரச்சனையை முன்வைக்கும் பத்திரிகை யாளர் மீது வன்மத்துடன் வழக்கு தொடுத்து சிறையிலடைப்பது அரசுக்கு அழகல்ல.

ஆளும் கட்சியும், அமைச்சரும் தலை யிட்டதன் பேரிலேயே மாநகராட்சி உதவி ஆணையர் இந்தப் புகாரை கொடுத்திருக்கி றார் என்பதே பொது மக்கள் மற்றும் அனை த்து பத்திரிகையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடி யாக சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவ தோடு சாம்ராஜா பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.