tamilnadu

img

டாஸ்மாக் திறப்பதற்கு சிபிஐ(எம்எல்) எதிர்ப்பு

மே 7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் வரு மானம் பார்ப்பது குடிப் பழக்கத்துக்கு உள்ளான உழைப்பாளர்களிடம் இருந்து பணத்தை பறிப்பதாகும்.

டீ கடைகள் திறந்தால் கூட்டம் கூடி கொரோனா பாதிப்பு வரும் என்று கூறும் அரசு, டாஸ்மாக் கடைகளில் தனிநபர் இடைவெளியை எதிர்பார்க்கமுடியுமா? அது கேலிக் கூத்தாக மாறும். கோயம் பேடு சந்தையில் ஏற்பட்ட தொற்று பெரும் அச்சத்தை சமூகத்தில் உருவாக்கியுள்ள சூழலில் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறப் போவது தமிழக டாஸ்மாக் கடை கள் தான்! எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடை களை திறக்கும் முடிவைக் கைவிட வேண் டுமென சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலா ளர் என்.கே.நடேசன் வலியுறுத்தியுள் ளார்.