நாகர்கோவில்,பிப்.5- கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக எல்லையான குமரி மாவட்டம், களியக்காவிளைக்கு வரும் வாகனங் களை மூன்று மருத்துவர்கள் அடங்கிய சுகா தாரத்துறை அதிகாரிகளால் சோதனை யிடப்படுகிறது. கொரோனோ வைரஸ் குறித்து விழிப் புணர்வு அடங்கிய துண்டு பிரசுரம் வழங்குவது டன், வாகனங்களின் சக்கரங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனின் மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்க ப்பட்ட பின்னரே பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனோ வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், அந்த குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.