tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவிலுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்கக்கோரி வழக்கு

மதுரை, ஜன. 31- கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா விலுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சமய செல்வன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக ஏராளமானோர் சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுநர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள  நகரங்களில் பரவியதில் 80 பேர் உயிரிழந் துள்ளனர். இதுவரை 3,000 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஊடகங்க ளில் சீனாவில் வெகுவிரைவில்  அவசர நிலை பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வும் செய்தி வெளியாகியுள்ளது இதனால் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளுக்காக சீனாவில் இருக்கும் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அங்கி ருப்பவர்களும் அவரவர் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு அச்சத்தை வெளிப்ப டுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நடவ டிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்பு வதை உறுதிப்படுத்தவும், கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய  சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத் தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறி யுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரைச்சுவாமி , ரவீந்திரன் ஆகியோர் முன் வெள்ளியன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசு பதில ளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 18- ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

;