tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று  ஒரே நாளில் 13 பேர் அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை ஒரே நாளில் 13 பேர் அதிகரித்து மொத்தம் 19 பேராக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் ஒரேயொருவர் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருந்தார். அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்த நிலையில் திங்களன்று வீடு திரும்பினார். இதற்கிடையே 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் திருப்பூர் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்த 2 பேர், அவிநாசி அருகே  தேவராயம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், உடுமலைபேட்டை பகுதியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர். ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 13 பேர் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.
 

;