tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை: ஆனாலும் கவனம் தேவை

சென்னை,மார்ச் 6- சென்னை விமான நிலையத்தில், கொரோனா சிறப்பு பரிசோதனை மையத்தில் பயணிகளுக்கு நடைபெறும் சோதனைகளை தமிழக சுகா தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்  என்றும் அதே சமயம் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா சிறப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள்  சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்தார். 80 விழுக்காடு கிருமிகள் கைகள் மூலமே பரவுகின்றன எனக் கூறிய  அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்ப டுத்திக் கொள்ளுமாறும் கூறினார். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்  கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் அதிகமாக உள்ள இடங்க ளுக்கு அவர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிராய்லர் கோழி, முட்டை...

பிராய்லர் கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்றும் அதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார்.