விழுப்புரம், மே 8 - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் வட்டத்திற்குட்பட்டது மேலமங்கலம் கிரா மம். இங்கு உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த பலர் சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு திரும்பி வந்தனர். அதில் 20 பேர் கொரோனா பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்க ளில் சிலருக்கு வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது. இதனை தொடர்ந்து மேலமங்கலம் காலனி பகுதிக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யென ஸ்டிக்கர் ஒட்டவும், தடுப்பை ஏற்படுத்த வும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அலுவ லர்கள் முயன்றனர். இதற்கு, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அரசு அலு வலர்களை திருப்பி அனுப்பினர்.
இதனிடையே, அதே கிராமத்தில் மற்றொரு பகுதியில் வசித்து வரும் மக்கள், அவர்களது பகுதிக்கு கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில், தங்களது வசிப்பிட பகுதி சாலையில் வேலி அமைத்து தடுப்புகளை ஏற்ப டுத்தினர். இந்த நிலையில், வெளியூர் செல்ல முயன்ற காலனி பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த வேலியை அகற்றியதால், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால், அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. விவ சாய நிலங்களில் இருந்த 5 மோட்டார் கொட்டகை களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த தகவலை அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன், காவலர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசா ரணை நடத்தி, அமைதியை ஏற்படுத்தினர். பின்னர், சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு கொரோனா குறித்த மக்களின் பயத்தை போக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலுவாக கொண்டு செல்லவும் அறிவுறுத்தினர்.