tamilnadu

img

கொரோனா தடுப்பு: அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாட முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, மார்ச் 29- கொரோனா தடுப்பு நடவ டிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதல மைச்சர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த வேண்  டும் என்று மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்  டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: கொரோனா எனும் பெருந்  தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை தமிழ கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. மக்கள் மனதில் உள்ள பதற்றத்தைத் தணித்து, ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்த பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்  கட்சிகளும் இணைந்து ஈடுபடுவது தான் சிறப்பாக இருக்கும்.

மக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடி யாது. அனைத்துக் கட்சிகளும்  ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடு படவேண்டிய தருணம் இது. ஆகவே, அனைத்துக்கட்சி தலை வர்களின் கூட்டத்தை உடனடி யாக கூட்டவேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவ தில் பிரச்சினை இருக்கும் என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் காணொலிக் காட்சி மூலம் கலந்து ஆலோ சனை நடத்துவதற்கான ஒரு  ஏற்பாட்டினை செய்து கொண்டு  மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து  கொரோனா தடுப்புக்கு, ஜன நாயக ரீதியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர்  ஈடுபடவேண்டும் என்று வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  ஸ்டாலின் தெரி வித்திருக்கிறார்.