tamilnadu

img

கொரோனா தடுப்புப் பணி:

முதல்வர் நிவாரண நிதிக்கு சிபிஎம் முன்னாள் எம்எல்ஏக்கள்- எம்.பி,. ஒரு மாத ஓய்வூதியம் வழங்கினர்

சென்னை,ஏப்.21- தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்களது ஒரு மாத ஓய்வூதியத் தொகையை வழங்கி யுள்ளனர்.   தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காசோலையுடன் அனுப்பியுள்ள கடிதம் விரபம் வருமாறு:

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப்பணிகளுக்கு “முதலமைச்சர் நிவாரண நிதி”க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஒரு மாத ஓய்வூதி யத்தை அளிப்பது என தீர்மானித்த அடிப்படையில் ரூ. 3 லட்சத்து 65 ஆயிரத்திற்கான காசோலை அனுப்பப் பட்டுள்ளது. காசோலை விபரம்: காசோலை எண்- 856582. இந்தியன் வங்கி, தி.நகர் கிளை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 20 ஆயிரம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;