tamilnadu

img

கும்பகோணத்தில் சிஐடியு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பங்குகளை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து கும்பகோணத்தில் சிஐடியு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், பொருளாளர் கண்ணன், நகர செயலாளர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபால், தலைவர் துரைராஜ், எல்ஐசி சேகர், சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
 

;