சென்னை, டிச. 21 - டிச.23 அன்று சென்னையில் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் சிஐடியு பங்கேற்கிறது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது, சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, காக்கப்பட்டு வரும் மக்கள் ஒற்றுமை மீது பா.ஜ.க அரசு தாக்கு தல் தொடுத்துள்ளது. டிச.12 அன்று கொண்டு வரப்பட்ட குடி யுரிமை சட்டத்திற்கு எதிராக வும், நாடு முழுவதும் அமலாக் கப்படவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், சகல பகுதி மக்களும் ஒரே குரலில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதி ராக நடைபெறும் போராட்டங் களை ஒடுக்க அரசு 144 தடை உத்தரவு, இணையதளம், கைப்பேசி சேவை முடக்கம், காவல்துறை, துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்தி தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறது.
அனைத்து அண்டை நாடுகளி லிருந்தும் பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு, நம் நாட்டில் வந்து குடியேறி யவர்களுக்கு மத வித்தியாச மின்றி, குடியுரிமை வழங்குவ தற்கு மத்திய அரசு முன்வரு வதே, பிரச்சனைக்குத் தீர்வாகும். அதற்கேற்ப புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். மத அடிப்படையில் மக்க ளைக் கூறு போடும், மதச் சார் பின்மை கோட்பாட்டிற்கு எதி ராகச் செயல்படும் மத்திய அர சைக் கண்டித்தும், அதன் அடக்கு முறைகளை எதிர்த்தும் தொடர்ச்சி யாகப் போராட முன்வருமாறு சிஐடியு தமிழக உழைப்பாளி மக்களைக் கேட்டுக் கொள்கிறது. தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுடன், மக்கள் ஒற்றுமை, நாட்டு ஒற்றுமை, அரசி யல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைப் பாதுகாத்திட ஜன வரி 8-ல் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சார்பில் டிச.23 அன்று சென் னையில் நடைபெறும் மாபெரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணி யில் கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பங்கேற்கு மாறு சிஐடியு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.