tamilnadu

img

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையத்திற்கு மத்திய அரசு அனுமதி

சென்னை,மார்ச் 20- சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:  சேலத்தில் கொரோனா  பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.சேலம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்படும். இந்த ஆய்வகம் உடனடியாக செயல் படத் தொடங்கும். கொரோனா பரிசோதனை ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளார். சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய  இடங்களில் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.இது ஐந்தவாது பரிசோ தனை மையம் ஆகும்.