tamilnadu

img

சென்னையில் கொரோனா பரிசோதனை மையம்: அமைச்சர்

சென்னை, மார்ச் 18- சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது  மருத்துவமனையில் கொரோனா பரி சோதனை மையம் வியாழக்கிழமை (மார்ச்19) முதல் செயல்படத் துவங்கும்  என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி வித்தார். கேள்வி நேரத்தின்போது பேசிய  எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,“ கொரோனா வைரசுக்கு ராஜஸ்தான், அமெரிக்காவில் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள்  உண்மைதானா? என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,“கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த புதிதாக மருந்தே  கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால், கொரோனா பாதித்த ஒருவரை குணப்ப டுத்தியது எப்படி? என்று சிலர் கேள்வி  கேட்கிறார்கள். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்போது என்ன மருந்து மாத்திரைகள் கொடுக்கி றோமோ அதைத்தான் தனித் தனியாக கொடுத்தோம்” என்றார்.

புதிதாக மருந்து கண்டுபிடிப்பது மற்றும் ஆராய்ச்சி நிலை குறித்து சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக் கழ கத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கு களில் 850 மருத்துவர்கள் காணொலி  மூலம் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட னர்.  இதுபோல பல்வேறு நாடுகளிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தமிழக மருத்துவர்களும் ஆய்வு செய்து வரு கிறார்கள். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று காத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னதாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி  வழங்குவது குறித்து திமுக உறுப்பினர்  க.பொன்முடி எழுப்பிய துணை கேள்  விக்கு பதில் அளித்த அமைச்சர், “அப்  பல்லோ, சி.எம்.சி. மற்றும் தகுந்த உபகர ணங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கலாம் என்று மத்திய அர சுக்கு தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்  ததும் தகுதி வாய்ந்த தனியார் மருத்துவ மனை களிலும் ஆய்வு நடத்தப்படும். அதில் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப் படும்” என்றும் தெரிவித்தார். சில தனியார் நிறுவனங்கள் சந்தே கத்தின் அடிப்படையில் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை சான்று பெற்று வந்தால்தான் வேலை என்று சொன்னதால் அந்த ஊழியர்களி டையே பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா பாதித்த மாநிலங்கள், நாடு களிலிருந்து திரும்பியவர்கள் மட்டுமே  அதற்கான பரிசோதனையை செய்து  கொள்ள வேண்டும். தகுந்த அறிகுறி  இல்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில்  பரிசோதனை செய்ய காத்திருக்க வேண்  டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.