tamilnadu

img

ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கு

தூத்துக்குடி, ஜூலை 11- சாத்தான்குளம் காவல்துறை யினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட வணிகர்களான ஜெயராஜ், இவரது மகன் பென னிக்ஸ் வீடுகளில் ஜூலை 11 அன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத் தினர். சாத்தான்குளம் மருத்துவ மனையிலும் விசாரணை மேற் கொண்டனர். இந்த கொலை வழக்கில் சாத் தான்குளம் காவல்நிலைய ஆய்வா ளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால் துரை உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதனையேற்று தில்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7 ஆம் தேதி மாலையில் இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக தில்லி சி.பி.ஐ. கூடுதல் கண்காணிப் பாளர் விஜயகுமார் சுக்லா நியமிக் கப்பட்டுள்ளார்.இவர் தலைமை யில் 8 பேர் அடங்கிய குழுவினர் தில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளியன்று மதுரைக்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் தூத்துக் குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கண்கா ணிப்பாளர் விஜயகுமார் முன்னிலை யில், இந்த வழக்கு விசாரணை அதி காரியான துணை போலீஸ் கண் காணிப்பாளர் அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார். 

இந்நிலையில் சாத்தான்குளம் காவல்நிலைய  கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் ஜூலை 11 அன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். சாத்தான்குளத்தில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

நீதித்துறை  நடுவர் விசாரணை

இதனிடையே, கோவில்பட்டி கிளைச் சிறையில் உள்ள கைதிகளி டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற் கொண்டார். கோவில்பட்டி கிளைச் சிறைக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் ஜூலை 11 காலை 10.45 மணிக்குச் சென்று, அங்கு ஜெய ராஜ்,பென்னிக்ஸ் இறப்பு தொடர்பாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்ற சிறை அறைகளில் இருந்த கைதிகளி டம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். அவர்கள் அளித்த வாக்குமூலத்தை உடனடியாக தட் டச்சர் மூலம் பதிவு செய்துகொண் டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.