சென்னை, மார்ச் 25- சமையல் எரிவாயு தடையின்றி விநி யோகிக்கப்படும் , மக்கள் அவசரமாக முன் பதிவு செய்ய அவசியமில்லை என இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல பொது மேலாளா் ஆா்.சிதம்பரம் செய்திப் குறிப்பை வெளியிட்டுள்ளார். பொதுத்துறை பெட்ரோலிய நிறுவ னங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழு வதும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு உருளை விநியோகம் இயல்பாக நடந்து வருகிறது. அடிப்படைத் தேவைகளான மொத்த எரிவாயு உருளைகள் கொள்முதல், நிரப்பு தல் மற்றும் விநியோகத்துக்கான போக்கு வரத்து வசதிகள் ஆகியவை தடையின்றி இயங்குவதால், சமையல் எரிவாயு உருளை விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெறும். தேவையற்ற அவசர முன்பதிவு களால், அவசியமாகத் தேவைப்படும் வாடிக் கையாளா்களுக்கு எரிவாயு உருளைகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், வாடிக்கையாளா்கள் தங்களது தேவைக்கு ஏற்றது போல் இயல்பான முறையில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, சமையல் எரிவாயு உரு ளையை அச்சத்தில் அவசரமாக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.