மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, ஆக. 26- தனிமனித இடைவெளியுடன் கோரிக்கை களை வலியுறுத்தி போராடியவர்களை மணலி காவல் ஆய்வாளர் அராஜகமாக கைது செய்த தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக்குழு கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மக்களுக்கு நிவாரணம் கோரியும் நாடு முழு வதும் ஆக.20 முதல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வடசென்னையில் 200க்கும் மேற்பட்ட மையங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் நடைபெற்றது. அதனையொட்டி ஆக.25ந் தேதி வடசென்னையில் 25 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மணலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பது கண்ட னத்துக்குரியது. இதுபோன்ற ஜனநாய விரோத நடவடிக்கைகளை காவல்துறை நிறுத்தாவிடில், மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.