ஒரே இயந்திரத்தில் நான்கு செயல்கள் - பேரிடர் காலத்தில் இளைஞர்களின் பெரு முயற்சி
கோவை, ஆக.11 - உடல் வெப்பநிலையும், சானி டைசிங், விபரம் சேகரிப்பு, கபசுர குடிநீர் என ஒரே இயந்திரத்தில் நான்கு செயல்கள் செய்யும் இயந்திரத்தை கோவையை சேர்ந்த இளைஞர்கள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ள னர். இதுகுறித்து கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் பேல்கன் ஸ்கொயர் என்ற நிறுவனத்தின் தலைவர் லோக நாதன், விற்பனை மேலாளர் கார்த் திக், முதன்மை மென் பொறியாளர் ஸ்டான்லி ஆகியோர் பத்திரிகை யாளர் சந்திப்பில் கூறுகையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக உடல் வெப்பநிலை கண் டறிய தெர்மாமீட்டர் மூலம் சோதனைகள் செய்யப்படுகிறது. இப் பணியை ஊழியர்கள் மேற்கொள் கின்றனர். இத்தகைய பணி செய் வோர் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.
மேலும் வெப்பமானி பல நேரங்களில் சரிவர காட்டாதது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள் ளது. இந்நிலையில், இதற்கு மாற்றாக தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள இயந்திரம் உடலின் வெப்பநிலையை காண்பிப்பது, சானிடைசிங் செய்வது, கபசுர குடிநீர் சீரான சூட்டில் விநி யோகிப்பது ஆகியவற்றை தானியங் கியாக செய்கிறது. மேலும், இதனை கணினி மூலம் இணைப்பதால் ஒவ்வொருவருடைய வெப்பநிலை மற்றும் சம்மந்தப்பட்ட வரின் விபரங்கள் சேகரித்துக் கொள் கிற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு நிமிடத்தில் 30 பேர் வரை வெப்ப சோதனை செய்ய முடியும். இதில் பெறப்படும் தகவல் களை கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் சேமித்து வைக்கும் வகையில் வடி வமைக்கப் பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களில் இதனை எளிதாக பயன்படுத்த முடியும். இதை எளிதாகவும் கையாள முடியும் என்றனர்.