போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் மக்கள் அச்சமின்றி நடப்பதற்கான ஏற்பாடு எனவும் கூறிக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மங்காடு சாலை அச்சத்தை ஏற் படுத்துவதாக மட்டுமல்ல சாலை அருகில் வீடுகட்டி குடியிருப்போர் வாகனங்களை பயன் படுத்த முடியாத அளவுக்கு அடிப்படை வசதியையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டிய மெதுகும்மல், குளத்துப் புறம், மங்காடு, முன்சிறை ஊராட்சிகளையும் புதுக்கடை பேரூராட்சியையும் இணைப்பது மங்காடு சாலை. களியக்காவிளை அருகில் உள்ள கோழிவிளை முதல் முன்சிறை வரை7.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மார்த்தாண்டம் வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும் பலவாகன ஓட்டிகளும் மாற்றுப்பாதையாக இதைபயன்படுத்தி வருகின்றனர். குழித்துறை- தேங்காப்பட்டணம் இணைப்பு சாலையாகவும் உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான வாகன போக்குவரத்து கொண்ட நெரிசல் மிக்க சாலையாகும். இதில்அடிக்கடி விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டுவருகின்றன. எனவே, இந்த சாலையை அகலப்படுத்தக் கோரி பொதுமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடியதாக கூறுகிறார் கட்சியின் முன்சிறை வட்டாரக்குழு செயலாளர் எஸ்.சிதம்பரகிருஷ்ணன்.ஆனால், தற்போது நடந்துள்ள சாலை விரிவாக்கப்பணி முதலுக்கே மோசம் என்பது போல்உள்ளது என்கிறார் மங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தங்கமணி. மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே இருந்ததார் சாலையின் இருபுறமும் ஓடுதள கற்கள் பதித்து அதற்கு வலுவூட்டும் விதமாக பக்கச்சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது மக்கள் அச்சமின்றி நடந்து செல்வதற்காக அமைக்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே இருந்த சாலையில் இருபுறமும் தாராளமாக மக்கள் நடந்து செல்லவும், எதிர்எதிர் வாகனங்கள் கடந்து செல்லவும் பயன்பட்டுவந்தது. தார்ச் சாலையின் அகலம் குறைவாக இருந்த நிலையில் அதை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக ஓடுதள கற்கள் பதித்திருப்பதும்மேடு பள்ளமான சாலையின் வடிவமைப்பும் மேலும் விபத்துகள் ஏற்படவே வழி வகுத்துள் ளது. வடிகால் இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி எளிதில் பள்ளமாகி சாலை சீர்குலைவுக்கு உள்ளாகும் என்றார்.ஓடுதள கற்களுக்கு பக்கபலமாக சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது சீராக இல்லை. பெரும்பாலானஇடங்களில் நடைபாதையை விட சுமார் அரைஅடி உயரத்தில் உள்ளது. மங்காடு ஜெரோம் தனது வீட்டின் முற்றத்திற்கு இருசக்கர வாகனம்கூட செல்ல முடியாத தடுப்புச் சுவரை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்றார். இது தனிமனித சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் என்கிறார் மங்காடு ஊராட்சிமன்ற முன்னாள் துணைதலைவர் எம்.சுரேஷ்குமார். வீடுகள் இல்லாத பகுதியில், வயல் வெளிகள், பள்ளங்களை அடையாளப்படுத்த சற்று உயரத்தில் தடுப்புச் சுவர் அமைத்தால் வாகன ஓட்டிகள் மீதான அக்கறையாக கருதலாம்.
ஆனால், அதுபோன்ற இடங்களை விட்டுவிட்டு வீடுகளுக்கு முன் தடுப்புச் சுவர் அமைத்திருப்பது மனித உரிமை மீறல் என்கிறார் சிதம்பரகிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், இந்தசாலையை அகலப்படுத்தும் பணி குறித்து நாகர்கோவில் கோட்டப்பொறியாளர் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘இச்சாலை ஓடுதள கற்கள் கொண்டு அகலப் படுத்த உத்தேசிக்கப்பட்டு, அதற்கான மதிப்பீடுதயார் செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக சாலை அகலப்படுத்தப்பட வேண்டிய, வழிகாட்டுதல்களின் படி, இச்சாலை அகலப்படுத்தப் பட மதிப்பீடு தயார் செய்யப்படவில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது.
மேலும் ஓடுதள கற்கள் மேல் கனரக போக்குவரத்து கிடையாது எனவும் மதிப்பீட்டில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சாலை விரிவாக் கம் என்பது முற்றிலும் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் ஆபத்தின்றி, ஓடுதளகற்கள் மீது செல்வதற்காக அமைக்கப்பட்டுவருகிறது. தார்தளம் கொண்டு அகலப்படுத்தும் போது மட்டுமே கனரக வாகனங்கள் அகலப்படுத்தும் பகுதியில் அனுமதிக்கப்படும்’ எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பதில் அறிவியல்பூர்வமான முறையான திட்டமிடல் இல்லை என்பதை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது என்றார்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்குழித்துறை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உதவிக் கோட்டப் பொறியாளர் பதில் அளித்துள்ளார். அதில், கோழிவிளை- முஞ்சிறை சாலை பணிக்காக வழங்கப்பட்டுள்ள தொகை குறித்த கேள்விக்கு‘இதுவரை வழங்கப்படவில்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது. சாலையின் உத்தரவாதம் குறித்த மற்றொரு கேள்விக்கு ‘மூன்று வருடங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற ஓடுதள கற்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. ஓடைகள், சிறுபாலங்கள் சீரமைக்கப்படவில்லை. ஒப்பந்ததாரர் தனக்கு சொந்தமான ஓடுதள கல் தயாரிப்பு கம்பெனியின் வளர்ச்சிக்காக மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறுகிறார் சிதம்பரகிருஷ்ணன்.பொதுப்பணிகளின் வெளிப்படைத் தன்மையின் ஒருபகுதியாக திட்டம் குறித்த அறிவிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தசாலை விரிவாக்கம் குறித்த திட்ட மதிப்பீடுஉள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட் டுள்ளது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது. இது குறித்து தகவல் அறிய குழித்துறை உதவி பொறியாளரை பலமுறை அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
**************************
நாளை ஆர்ப்பாட்டம்
தரமற்ற முறையில் சாலை விரிவாக்கப் பணி நடந்த போதுஉடந்தையாக இருந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையின் பக்கச்சுவர்களை அப்புறப்படுத்தி தரமான தார்ச்சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி புதனன்று (நவ.18) காலை 10.30 மணிக்கு குழித்துறை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
===சி.முருகேசன்===