ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை, மார்ச் 23- அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் ஆட்டோ தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை இலவச மாக வழங்க வேண்டும். கிருமி நாசினி, முக கவசம் போன்றவற்றை இல வசமாக வழங்குவதோடு, ஆட்டோ ஓட்டுநர்கள் வங்கி, தனியார் நிறுவனங்களில் பெற்றுள்ள கடனுக்கு தவணைத் தொகை கூடுதல் வட்டியின்றி செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும். மெக்கானிக், டிங்கர், பெயிண்டர் உள்ளிட்ட பழுது பார்க்கும் பணி நடைபெறாத காரணத்தால் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு, குறிப்பிட்ட தேதி தள்ளி வரும் ஆட்டோக்களுக்கு அபராதம் வசூலிக்காமல், தகுதி சான்று வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.