tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டலும் கொரோனா தனது பரவல் வேகத்தை குறைக்காமல் "என் வழி தனி வழி" என்ற போக்கில் தான் பயணித்து வருகிறது. குறிப்பாக தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை கணிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (புதன்) ஒரே நாளில் 119 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,633 பேர் குணமடைந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை 2,56,313 பேர் கொரோனாவை வென்றுள்ளனர். 

;