tamilnadu

img

உணவு பாதுகாப்புச் சட்டவிதிகளில் மாற்றம் கோரி ஆணையரிடம் ஏ.எம்.விக்கிரமராஜா மனு

சென்னை, ஜூலை 23- தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு மாநிலத் தலை வர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பீலா ராஜேஷை சந்தித்து உணவுப்பாதுகாப்பு சட்டவிதிகளில் மாற்றங்கள் செய்யக் கோரி  மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: உரிமம் புதுப்பித்தலில் உள்ள  வணிகர்களின் இன்னல்கள், அபராதத் தொகை தவிர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும்,  மாநில மண் சார்ந்த விளை பொருட்களின் தரத்திற்கேற்ப சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். சிறு குறு வணி கர்கள் வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகள் இந்த சட்ட விதி களால் பாதிக்கப்படாமல், தயா ரிப்பு நிலையிலேயே பொருட்க ளின் தரத்தை உறுதி செய்யவும், தயாரிப்பு நிறுவனங்களே தரத் திற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் உரிமங்களை ஆன் லைனில் புதுப்பித்தலில் உள்ள சிரமங்களை தவிர்த்திடவும், உரிமம் புதுப்பித்தலில் கால அவ காசம் அளிக்க வேண்டும். செவ்  வாயன்று (ஜூலை 23) தில்லி யில் நடைபெறும் அகில இந்திய  குழுக்கூட்டத்தில் இந்த கருத்துக்  களை வலியுறுத்தி, அகில இந்திய அளவில் உரிய நடவடிக்கை களை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.