tamilnadu

img

மதுரையில் ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு களை கட்டட்டும் போட்டி

மதுரையில் ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு ‘களை கட்டட்டும் வீடு’ என்ற அழைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  ஆன்லைன் மூலமாக பல்வேறு போட்டிகளை நடத்தினார். அதில் வெற்றிபெற்ற மாணவர்களை தேர்வு செய்து கடந்த ஏப்ரல் 18 அன்று திரைக்கலைஞர்  விஜய் சேதுபதி அறிவித்தார். இதில் மதுரை பெத்தானியாபுரம் காமராஜர் முதல் தெருவைச் சேர்ந்த டி.ஜான் மைக்கேல் மகள் ஜெனிட்டா ரீனி (6ஆம் வகுப்பு)  பரிசு பெற்றார். தனக்கு கிடைத்த பரிசுத் தொகை ரூ.5ஆயிரத்தை கொண்டு அப்பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்பட அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வாங்கிக் கொடுத்தார். தகவலறிந்து ஜெனிட்டாவை நேரில் சந்தித்து சு.வெங்கடேசன் எம்.பி., பாராட்டு தெரிவித்தார்.