tamilnadu

img

வெளிநாட்டவர் தொழில் துவங்க 8 ஆயிரம் ஏக்கர் தயார்:ஓபிஎஸ்

சென்னை, டிச.10- தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கு வதற்கு 8,000 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் நிலையில் இருப்பதாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன், அமெரிக்க - இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட் டாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்  குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதன் மூலம் புதிய தொழில்களைத் துவங்கலாம் என்றும்  கூறியுள்ளார். தமிழகத்தில் முதலீட்டாளருக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சி பெருகவும் துறை ரீதியாகக் கொள்கை முயற்சிகளை அரசு தொடர்ந்து  மேற்கொண்டு வருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

;