தமிழகத்தில் கொரோனா தாக்கம் எதிரொலியாக (மார்ச் 31) செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிவரை 2,09,288 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 22,049 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3,371 பேர் செயற்கை சுவாசத்தில் உள்ளனர். இந்தநிலையில் 630 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2,354 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் 1977 பேருக்கு தொற்று அறிகுறி இல்லை. 74 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. 303 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆறு பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.